உணவகத்திற்கு துணிப்பை, பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு சிறப்பு சலுகை

ஓட்டலுக்கு பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு கோவில்பட்டியில் உள்ள உணவகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள உணவகம், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வருகிறது. மஞ்சள் பை,பாத்திரங்கள் கொண்டு வருபவர்களுக்கு 2சதவீத சலுகை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்ட நடவடிக்கையாக வாடிக்கையாளர்களுக்கு பாத்திரங்கள் வழங்க உள்ளதாக உணவக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version