அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மாரத்தான்

சென்னையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மாரத்தானில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா அருகே அன்னையர் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், மற்றும் 7 கிலோ மீட்டர் ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அன்னையர் தினத்தையொட்டி நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறுதியாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Exit mobile version