கோவையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். முகாமில், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.

Exit mobile version