ரூ.2000 சிறப்பு நிதி: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பிற்கு தொழிலாளர்கள் சங்கம் வரவேற்பு

கட்டட தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புக்கு, கட்டட தொழிலாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய முன்னேற்ற பொதுநல சங்கத்தின் செயற்குழு கூட்டம், மாநில தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார். செயற்குழு கூட்டத்தில் கட்டடத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மகாலிங்கம் தெரிவித்தார்.

Exit mobile version