காந்தி சென்னை வந்து சென்றதன் நினைவாக சிறப்பு தபால் உறை

மகாத்மா காந்தி சென்னைக்கு முதல் முறையாக வந்து சென்றதன் நினைவாக, சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. மண்ணடியில் தபால் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வட்டார அஞ்சல் துறைத் தலைவர் சம்பத் கலந்துகொண்டார். சிறப்பு தபால் உறையை தலைவர் சம்பத் வெளியிட, தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குனர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார்.

மேலும், தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி சென்று வந்த சுமார் 11 இடங்களில், இந்த தபால் உறை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட இருப்பதாகவும் சம்பத் தெரிவித்தார்.

Exit mobile version