சிறப்பு விநியோகத் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு : தமிழக அரசு

சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கி வரும் கூடுதல் உணவுப் பொருட்கள் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் உளுந்த பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் உணவுப் பொருட்கள் 2020 பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீட்டிப்பினால் ஏழை மக்கள் பயன்பெறுவதோடு வெளிச்சந்தையில் இப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version