சிறப்பாக கொண்டாடப்பட்ட கால்டுவெல்லின் 150 வது பிறந்தநாள் விழா

தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் 205 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில்  உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடி ராபர்ட் கால்டுவெல் பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஸ்காட்லாந்தில் பிறந்த ராபர்ட் கால்டுவெல் தமிழகத்திற்கு வந்து தமிழில் பெரும் புலமை பெற்றவர். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டினை நினைவு கூறும் வகையில் அவருடைய பிறந்த நாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version