“பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்” சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

வரும் 11ம் தேதி சீன அதிபர் ஜி ஜிங்பிங் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு வருகிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தநிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில், வெண்பந்துக் கல் ஆகிய வரலாற்று முக்கிய இடங்களுக்கு சென்று முதல்வர் பார்வையிட்டார்.

‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்’ என்ற சிறப்பு முகாமை, மாமல்லபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதையொட்டி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்களின் கண்காட்சியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் பார்வையிட்டனர். பின்னர், பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களை பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் 3 மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர். வரும் 11ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின் போது, பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபரின் வருகை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version