பொங்கல் பண்டிக்கைக்கான சிறப்பு பேருந்துகள் விவரம் ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் – அமைச்சர்

பொங்கல் பண்டிக்கைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்திய பின் விபரங்கள் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் கரூர் ரயில் சந்திப்பு நிலையத்தில் நுழைவாயில் பூங்கா அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் நடுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் இருந்து சென்னை வரை செல்லும் சிறப்பு விரைவு ரயில், கரூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். 

Exit mobile version