பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15,16,17 ஆகிய நாட்களில் மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

மெட்ரோ பயணிகளின் வசதிக்காக அனைத்து ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ இரயில் பயணச் சீட்டுகளில் 50% கட்டண தள்ளுபடி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 15,16 மற்றும் 17 வரை மூன்று நாட்களில் மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணம் தள்ளுபடியில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், 17-ஆம் தேதியன்று அரசினர் தோட்டம் மற்றும் டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக காலை முதல் இரவு வரை சீருந்து இணைப்பு சேவைகள் இணைக்கப்படவுள்ளன.

எனவே பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version