யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோருக்கு வசதியாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு

சென்னை மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோருக்கு வசதியாக, மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 72 மையங்களில் நடைபெற உள்ளது. 10 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மையங்களில் தேர்வு எழுதுவோர் வசதிக்காக, ஞாயிறு அதிகாலை 4.30 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 8 மணிக்கு இயக்கப்பட்டு மெட்ரோ ரயில் வந்தது. இந்நிலையில், யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோருக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. தேர்வு எழுதுவோருக்கு, மெட்ரோ நிர்வாகம் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

Exit mobile version