சென்னை தியாகராய நகரில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தன்னை தானே சுட்டு தற்கொலை!!

சென்னை தியாகராய நகரில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராய நகரில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அலுவலகத்தில் ஆயுதப்படை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சேகர் கடந்த 10 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், பணியில் இருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக தனது கைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வங்கியில் பெற்ற 25 லட்ச ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாத மன அழுத்தம் காரணமாக தாம் தற்கொலை செய்து கொள்வதாக சேகர் கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்துள்ளது

Exit mobile version