உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்

சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில், அர்ஜெண்டினாவை வீழ்த்தி, ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியுள்ளது.

18-ஆவது உலகக் கோப்பை கூடைப்பந்து தொடர் சீனாவில் நடைபெற்றது. தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா – ஸ்பெயின் அணியும் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீஜிங்கில் நடந்த இறுதி போட்டியில், இரு அணி வீரர்களும் மாறி மாறிப் புள்ளிகளை குவித்தனர். ஸ்பெயின் வீரரான ரிக்கி ரூபியோ 20 புள்ளிகளை அணிக்கு பெற்றுக் கொடுத்தார். முடிவில் 95-க்கு 75 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்பெயின் அணி கோப்பையைக் கைப்பற்றியது. 

Exit mobile version