தேர்தல் வந்தா மட்டும் திமுக வேல் பிடிக்கும்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளாசல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சி மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.

தாராபுரம் அண்ணா சிலை அருகே வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர், தாராபுரத்தில் முருகன் வெற்றி பெற்றால் மத்திய அரசின் நலத்திட்டங்கள் உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். தாராபுரம் தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து தன்னை சந்தித்து பேசியதால், அவருக்கு இந்த முறை சீட் வழங்க கூடாது என திமுக வற்புறுத்தியதாக தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நேரத்தில் மட்டும் பக்தி வேஷம் போடும் ஸ்டாலினின் ஏமாற்று வேலைகளை மக்கள் அறிவார்கள் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version