தேர்தலுக்காக திமுக போராட்டங்களை தூண்டி வருகிறது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

குடியுரிமை சட்டத்தை பொருத்தவரை, ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் தான் பொறுப்பேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள போதிலும், தேர்தலுக்காக திமுக போராட்டங்களை தூண்டி வருவதாக உள்ளாட்சித் துறை எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சிறுவர் முதல் பெரியவர் வரை, இஸ்லாமிய பெருமக்களிடையே திமுக அச்ச உணர்வை ஏற்படுத்தி வருவதாக புகார் தெரிவித்தார். கச்சத்தீவு உள்ளிட்ட தமிழக உரிமைகளை காவு கொடுத்த கட்சி திமுக எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version