மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது – எஸ்.பி.வேலுமணி

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளதாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, மாற்று திறனாளிகளுக்கு, நலத்திட்டங்களை உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைகள் இருந்தால் அதனை அரசு நிவர்த்தி செய்யும் எனவும் உறுதி அளித்தார்.

Exit mobile version