தென்மேற்கு பருவ காற்றால் தமிழகம், புதுவையில் 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில், தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் பதிவாக கூடும் என்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மன்னர் வளைகுடா, குமரி கடல் மற்றும் தெற்கு, கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூடத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும், வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version