கேரளாவில் தென்மேற்கு பருவமழை: குற்றாலத்தில் களைகட்டியது சீசன்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது.

கேரளாவில் சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.கேரளாவில் பெய்து வரும் கன மழையால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் காலை முதல் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்து செல்கின்றனர்.

Exit mobile version