கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பரவலாக மழை!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்
தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி
வதைத்து வந்தது. கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்
அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே கேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை
தொடங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து
வருகிறது. நாகர்கோவில், சுசீந்திரம், மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த தொடர் மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக, வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version