தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் வெப்பம் குறையும்

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தாலும், கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸில் இருந்து, அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version