தென்மேற்கு பருவமழையால் பாலருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

கேரளாவில் பருவமழையின் காரணமாக, பாலருவியில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மழைப் பகுதியில் பெய்த தொடர் மழையால், கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஆரியங்காவில் உள்ள பாலருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரிக்கத் துவங்கியுதுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நீர்வரத்து காணப்படுவதால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.

Exit mobile version