கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென்மேற்குப் பருவ மழை தமிழகத்தில் படிப்படியாக தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவக் காற்று வலுவடைந்து வருவதாகவும், மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருவதால் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை இன்று கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், படிப்படியாக பிற மாநிலங்களுக்கும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உள்மாவட்டங்களில் வெப்பநில இயல்பை விட 3 டிகிரி வரை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version