பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

பராமரிப்பு பணிக்காக தாம்பரம் – கடற்கரை இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடற்கரை – செங்கல்பட்டு இடையேயும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணி, 11.50, 12.30, 1.45, 2.15, 2.45 ஆகிய நேரங்களில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். இதே போல செங்கல்பட்டு – கடற்கரை ரயில்களும் ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. அதே நேரம் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – கடற்கரை இடையே 8 சிறப்பு ரயில்கள் காலை 11 மணி முதல் 2.40 வரை இயக்கபடும்.

இதேபோல கடற்கரை – தாம்பரம் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் அறிவிப்பால் நாளை குறைந்த அளவிலான மின்சார ரயில்களே இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை – அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.25 க்கு இயக்கப்படும் ரயில் வரும் 18ம் தேதி வரை வண்ணார்பேட்டையில் இருந்து இயக்கப்பட உள்ளது.

Exit mobile version