பயணிகள் வரத்து குறைந்ததால் 12 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே!

கொரோனா எதிரொலியாக பயணிகள் வருகை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால்14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக வெளி இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் இன்று 62 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 14 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் பயணிகள் ரயில் 23, 25, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில் 20, 24, 27, 31 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-செகந்திராபாத், சென்னை சென்ட்ரல்- சந்திரகாசி((SANTRAGchi)) உள்ளிட்ட 12 ரயில்களும் பயணிகள் வருகை குறைந்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், அலகாபாத், பிரயாக் இடையே நடைபெற்று வரும் பணிகள் காரணமாக மேலும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version