தென் இந்திய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டிகள்

மதுரை அருகே, தென் இந்திய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார்.

மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் தென் இந்திய அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்மாநிலங்களுக்கான சிலம்பாட்ட போட்டியை துவங்கி வைத்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மேலும், இன்றைய இளைஞர்கள் கணினியே வாழ்க்கை என்றும், கைபேசியே உலகம் என்று இருக்காமல், இது போன்ற விளையாட்டுக்கள் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Exit mobile version