குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். இந்நிலையில்  நாளை கொண்டாடப்பட உள்ள 70வது குடியரசு தின விழாவுக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இதையொட்டி தன்னுடைய மனைவியுடன் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்திற்கு வந்திறங்கிய சிரில் ராமபோசாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி, கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன.

Exit mobile version