இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பை தடுக்க தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.

இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 9 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்களை இழந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி திணறி வருகிறது. விக்கெட் இழப்பை தடுக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

 

Exit mobile version