BCCI தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி அண்மையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் முக்கியமானவராக கருதப்படும் கங்குலி தற்போது கொல்கத்தா கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39 வது தலைவராக இன்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய் ஷா கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகவும் பொறுப்பேற்க உள்ளார்.

Exit mobile version