கோவையில் தயாராகும் அதிநவீன முகக்கவசங்கள்!

கோவையில் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படும் முகக்கவசங்களுக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.காந்திபுரம் பகுதியை சேர்ந்த முரளி என்பவர், கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அதிநவீன முகக்கவசங்களை தயார் செய்து வருகிறார். ஒருவருடைய புகைப்படத்தை எடுத்து அதற்கு ஏற்றார்போல் மூக்கு, வாய் மற்றும் தாடி ஆகியவற்றை பிரிண்ட் செய்து தருகிறார். இதை தயாரிக்க 4 மணி நேரம் செலவாகும் எனவும் வரும் காலத்தில் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இதனை தயார் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றார்போல் முகக்கவசத்தை தயார் செய்து கொடுப்பதாகவும், இந்த முகக்கவசத்தை சலைவை செய்து பயன்படுத்தலாம் என்பதால் பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் முகக்கவச தயாரிப்பாளர் முரளி கூறுகிறார்.

Exit mobile version