விரைவில் மாநிலங்களவையில் புதிய எம்பிக்களுக்கான தேர்தல்

மாநிலங்களவை தமிழக எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய எம்பிக்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த அர்ஜூனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா மற்றும் திமுகவைச் சேர்ந்த கனிமொழி ஆகிய ஆறு பேர் தற்போது மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இந்த ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் மூன்று பேரும் திமுக சார்பில் மூன்று பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Exit mobile version