இந்தியாவில் விரைவில் 5ஜி சோதனை -சாம்சங் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் விரைவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள உள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு துறையுடன் மிகவும் நெருக்கமான முறையில் இணைந்து சாம்சங் செயலாற்றி வருவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் வரும் 2019-ல் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் மிகப்பெரிய அளவில் 5ஜி சேவையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லியில், பல்வேறு படி நிலைகளில் இந்த சோதனையை நடத்தவுள்ளது.

5ஜி தொழிநுட்பத்தால் வாடிக்கையாளர்கள் பயனடைவதை தவிர, சுகாதார பராமரிப்பு, வேளாண் துறை, சிறிய நகரங்கள் மற்றும் கண்காணிப்பு பகுதிகளில் அதிகளவில் பயன் தரக்கூடியது என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

 

Exit mobile version