சொத்து போதும், அப்பா வேண்டாம் ; தந்தையை விரட்டிய மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பத்தில் 5 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று 103 வயதான தந்தை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள சென்னீர்குப்பத்தை சேர்ந்த பரசுராமன் கடந்த சில ஆண்டுகள் தனக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தில் ஒரு பகுதியை, மகன்களுக்கு எழுதி வைத்துள்ளார்.

மீதமுள்ள சொத்தை 2 மகன்கள் பெயரிலும் பதிவு செய்தார். ஆனால், மகள்களின் சொத்துக்களையும், எத்திராஜ்-சீனிவாசன் சகோதரர்கள் தங்கள் பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மகள்கள் பெயரில் இருந்த 5 கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலி ஆவணம் மூலம் அபகரித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரசுராமன் மாவட்டம் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Exit mobile version