மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்ய மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார பணியாளர்களுக்கு பிரத்யேக ஆடைகள், N-95 முக கவசங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version