சோனியாகாந்தி வீட்டில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது பற்றியும் தேசியக் குடிமக்கள் பதிவேடு பற்றியும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது பற்றித் தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடையே நேற்றுப் பேச்சு நடைபெற்றது. இதையடுத்து சோனியாகாந்தி வீட்டில் இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அம்பிகா சோனி, அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். அனைத்து மாநிலங்களிலும் தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிரத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Exit mobile version