நாமக்கல் அருகே மதுவில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தந்தைக்கு மதுவில் விஷம்கொடுத்து கொன்றதாக அளிக்கப்பட்ட புகாரில், மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவகியுள்ள மருமகனை ஆயில்பட்டி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராசிபுரத்தையடுத்துள்ள நாரைகிணறு பகுதியைச் சேர்ந்த விவசாயி தனபால், வயது முதிர்வு காரணமாக 2 மாதமாக நோய்வாய்பட்டு படுக்கையிலே இருந்த நிலையில் அவர் கடந்த 6 ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர், அதே பகுதியிலேயே உறவினர்கள் அடக்கம் செய்தனர். இதனிடையே தனபாலின் மகள் செல்வி தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆயில்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில் ராசிபுரம் வட்டாச்சியர் முன்னிலையில் தனபாலின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக அவரது மகன் வெங்கடேசிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடல்நிலை சரியில்லாத தந்தையை கவனிக்க முடியாததால் தானும் சகோதரி செல்வியின் கணவரும் சேர்ந்து தந்தைக்கு மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். உடனே வெங்கடேசை கைது செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் கொலைக்கு உடைந்தயாக இருந்த செல்வியின் கணவர் நடராஜ் என்பவனை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Exit mobile version