ஊரக தேர்தலில் தந்தையின் வெற்றியை கொண்டாடிய மகன் உயிரிழப்பு

திருப்பூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தந்தை வெற்றி பெற்ற சந்தோஷத்தில் மகன்   உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட உகாயனூரில் வார்டு உறுப்பினர் பதவிக்கு சுப்பிரமணியன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து தனது தந்தைக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மேள தாளங்களுடன் நடனமாடிய மகன் கார்த்தி சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version