ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர் : அமைச்சர் செல்லூர் ராஜூ

50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் தற்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, எப்போதும் பொறுமையாக பேசும் நடிகர் ரஜினியை, தற்போது யாரோ தவறாக வழிநடத்துவதாக கூறினார். அதிமுகவை விமர்சிக்க துரைமுருகனுக்கு அருகதை இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

Exit mobile version