பிரதமரின் பேச்சை சிலர் தவறாக திசை திருப்ப முயற்சி!

சீனாவின் ஊடுருவல் முயற்சி, பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில் நடந்த மோதல் குறித்தும், நாட்டின் பாதுகாப்பு பற்றியும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்து பிரதமர் பேசியதை சிலர் தவறாக திசை திருப்புவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஊடுருவல் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டுள்ளது என்றும், எல்லைக் கோட்டை தாண்டி நுழைய முயன்றால், இந்தியா பதிலடி கொடுக்கும் எனவும் நேற்றைய கூட்டத்தில் பிரதமர் பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மோதலுக்கு பிறகுதான் சீனா ஊடுருவாமல் இருக்கிறது என்றும், ஏற்கனவே நடந்த ஊடுருவல் முயற்சியை வீரர்கள் உயிர் தியாகம் செய்து தடுத்ததாகவும், பிரதமர் மோடி பேசினார் என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version