ராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது!

சீன ராணுவத்தின் தாக்குதலில் வீர மரணமடைந்த ஹவில்தார் பழனியின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

லடாக் எல்லையில் கால்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த பழனி உள்பட, 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் பழனியின் மரணத்தால், ஒட்டுமொத்த கடுக்கலூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பழனியின் உடலை காண்பதற்காக, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். இதனிடையே, பழனியின் குடும்பத்தினரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Exit mobile version