மென்பொருளை உருவாக்கும் போட்டி : தேனி தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் இரண்டாம் இடம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடத்தப்பட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அமைச்சகத்தின் நிர்வாகத்திற்குத் தேவையான மென்பொருளை உருவாக்கும் போட்டி நடைபெற்றது. தேனியில் உள்ள தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். 36 மணி நேரத்தில் மென்பொருளை உருவாக்கும் வகையில், 3 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

Exit mobile version