கோவையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆரம்பித்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை மூலம் கோவையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர், பேசிய அமைச்சர் வேலுமணி இளைய தலைமுறை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் கோவை பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை திறந்து வைத்த அவர், அதிமுக அரசின் மூலம் 50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை கோவை மாநகரம் பெற்றிருப்பதாக கூறினார்.

Exit mobile version