யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய சமூக ஆர்வலர்!

கொரோனா நிவாரண நிதியாக சமூக ஆர்வலர் பூல்பாண்டி 10வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 10 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டி கொரோனா தொடங்கியது முதலே பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த மே மாதம் முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் வினயிடம் வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது 10வது முறையாக 10 ஆயிரம் ரூபாயை நிவாரண உதவியாக மாவட்ட ஆட்சியரிர் வினயிடம் வழங்கினார். இது குறித்து பூல்பாண்டி பேசிய போது தன்னை போல யாசகம் பெறும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் எனவும், உழைத்து மட்டுமே உண்ண வேண்டும் என்பதே எனது அறிவுரை எனவும் தெரிவித்துள்ளார். யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை பாராட்டி சமூகசேவைக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version