இதுவரை வேலூர் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 3.44 கோடி பறிமுதல்

வேலூர் தொகுதியில் இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை 19 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்திருப்பதாக கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ கூறினார்.

Exit mobile version