திம்பம் மலைப்பாதையில் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாகச் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 105 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தத் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த காட்டுப்பகுதி வழியாகச் செல்கிறது. திம்பம் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக இரவிலும் காலையிலும் பனி மூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனத்தை ஓட்டிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version