கோவை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட தங்கத்தகடுகள் பறிமுதல்

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 56 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத் தகடுகளை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு தங்கம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, மும்பையை சேர்ந்த  ஜூனட் யூசுப் ஷேக் மற்றும் அசிம் சஜித் குரோஷி ஆகியோர் கொண்டு வந்த துணிகளில் மறைத்து வைக்கப்பட்ட தங்க தகடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

Exit mobile version