Flipkart-ல் ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி சலுகைகள்

முன்னணி இணையதள விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட் மொபைல் திருவிழாவை கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

“மொபைல் பொனான்ஸா” என்னும் பெயருடைய இத்தகைய மொபைல் திருவிழா இன்று பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 23 நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

ரியல்மி 2 ப்ரோ, அஸஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1, ரெட்மி நோட் 6 ப்ரோ, அஸஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2, ரியல்மி C1, ஃபோகோ F1 என பல முன்னணி ஸ்மார்ட் போன்கள் எதிர்பாராத சலுகை விலையில் விற்பனைக்கு உள்ளன. இவை மட்டுமல்லாது மற்ற ஸ்மார்ட் போன்களும் சலுகை விலையில் உள்ளன.

இந்த மொபைல் திருவிழாவின் சிறப்பம்சமாக சாம்சங் நிறுவனத்தின் “கேலக்ஸி S10” அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிப்ரவரி 21ம் தேதி நள்ளிரவு 12.30. மணியளவில் ஃபிளிப்கார்ட் இணையத்தளத்திலேயே இதன் வெளியீடு நடைபெறுகிறது. இதனுடன் கூடுதலாக சாம்சங் இயர்பட்ஸ் அறிமுகமும், இதர S10 சீரிஸ் வெளியீடுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த மொபைல் திருவிழாவில் அக்ஸிஸ் பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கொண்டு ஷாப்பிங் செய்ப்பவர்களுக்கு 10% சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவணை முறையில் மொபைல் வாங்கும் அக்ஸிஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version