ஐசிஎப் அருகே வெடிபொருட்கள் வெடித்ததில் சிறுமி படுகாயம்

சென்னை ஐசிஎப் அருகே பாழடைந்த கட்டடத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி படுகாயம் அடைந்தார்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சிறுமி காயத்திரி, ஐசிஎஃப் ராஜிவ்காந்தி நகர் முதலாவது தெருவில் உள்ள பாழடைந்த கட்டடம் அருகே நடந்து செல்லும் போது தீடீர் என்று கட்டிடத்தில் இருந்து வெடிபொருட்கள்
வெடித்து சிதறியது. இதில் சிறுமி காயத்திரி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் காயத்திரியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த ஐசிஎஃப் காவல்துறையினர் பாழடைந்த கட்டடத்தை ஆய்வு செய்த போது, 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version