அரசுப் பள்ளி சுவரில் பொன்மொழிகள், விழிப்புணர்வு ஓவியங்கள்!

நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி சுவர்களில் வரையப்பட்டுள்ள பொன்மொழிகள், விழிப்புணர்வு வாசகங்கள் மாணவ, மாணவிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளன.

உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல் நிலைப்பள்ளியில், ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், பள்ளியின் தடுப்பு சுவரில் அனைவரையும் கவரும் வகையில், பொன் மொழிகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது பங்களிப்பு வழங்கி வருகின்றனர். மாணவர்களுக்கு அரசுப்பள்ளிகளில் பயிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version