தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில், புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் செயலாளராக இருந்துள்ளார். இந்த பதவிக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ஹன்ஸ் ராஜ் வர்மா, அபூர்வ வர்மா, பிரதீப் யாதவ் இவர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version