ஜம்மு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கிச்சூடு – 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் கப்ரன் படாகண்ட் என்ற இடத்தில் இன்று அதிகாலை ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

கடந்த 20-ம் தேதி சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version